Friday, November 28, 2008

சொட்டுநீர் பாசனம் - விவசாயியின் அனுபவம

விவசாயிகள் சொட்டுநீர் பாசனத்தை தாங்களாகவே அமைத்துக்கொள்ளலாம். முதலில் சொட்டுநீர் பாசனம் அமைந்துள்ள நிலங்களுக்குச் சென்று பார்த்து, அமைத்துள்ளவர்களிடம் பேசி விபரம் அறிந்துகொள்ளவும். பொதுவாக மின்சார மோட்டார் பொருத்தியுள்ள கிணற்றிலிருந்து வெளிவரும் டெலிவரி பைப்பில் தொட்டியில் தண்ணீர் விழுமிடத்தில் ஒரு கேட் வால்வு அமைத்து தண்ணீரை சொட்டு நீர் பைப்புகளுக்கு போகும்படி செய்துகொள்ளலாம். சிலர் தனியாக பெரிய தொட்டி கட்டி அதில் தண்ணீர் நிரப்பி அதை சொட்டுநீர் பைப்புகள் வழியாக சொட்டுநீர் செலுத்துகிறார்கள். இது அவசியமில்லை. போர்வெல் டெலிவரியையும் நேரடியாக சொட்டுநீர் குழாய்களுக்கு செலுத்தலாம். சொட்டுநீர் பைப்புகளின் ஆரம்பத்தில் ஒரு கேட் வால்வு அமைத்துக்கொள்ளவும். இரண்டு அங்குல பிவிசி பைப்புகள், பின்பு ஒன்றரை அங்குல பைப்புகள் அமைத்து அதிலிருந்து 12 மிமீ டியூப் வழியாக மரத்திற்கு ஒரு 12 எம்எம் பிவிசி டேப் பொருத்தவேண்டும்.



அப்போதுதான் எல்லா மரங்களுக்கும் தேவையான அளவு தண்ணீர் செலுத்த முடியும். பொதுவாக சொட்டுநீர் பைப்புகள் மற்றும் வால்வுகள் விற்கும் கடைக்காரர் இவற்றை எப்படி அமைத்துக்கொள்வது என்பதையும், அதற்கு தேவையான பொருள்களையும் கருவிகளையும் தந்து உதவி செய்கிறார். பூமியில் ஒன்றை அடி ஆழத்தில் நீளமாக குழி எடுத்து அதில் 2 அங்குல பிவிசி பைப்புகளை அமைத்து மூடிவிட வேண்டும். ஒவ்வொரு தென்னை மர வரிசைக்கும் ஒரு 12 எம்எம் பிவிசி டியூப்-ஐ பொருத்தவும். மரத்தின் அருகில் சிறு 12 எம்எம் டேப் பொருத்திக்கொள்ள வேண்டும். 5 முதல் 7 மரங்களுக்கு ஒரு 12 எம்எம் பிவிசி டேப் கனெக்ஷன் எடுக்க வேண்டும். 12 எம்எம் டியூப்களை தரை மேலேயே போட்டு தண்ணீர் பாய்ச்சலாம். உழும்பொழுது அவற்றை சுற்றி நடுவில் வைத்துவிட்டு உழவும்.


பராமரிப்பு: அவ்வப்போது எல்லா மரங்களுக்கும் தேவையான தண்ணீர் கிடைக்கிறதா என பார்த்துக்கொள்ள வேண்டும்.
சொட்டுநீர் பாசனத்தின் மிகப்பெரிய சவுகரியம் என்னவென்றால் கிணற்றில் தண்ணீரும் கரண்ட் சப்ளையும் இருக்கும் போதெல்லாம் தென்னைக்கு தண்ணீர் விடலாம். தற்போது என் கிணற்றில் போதிய தண்ணீர் இருப்பதால் பகலில் 6 மணி நேரமும் (6-12 அல்லது 12-6 மணிவரை) இரவில் 8 மணி நேரமும் (10-6 மணி) தொடர்ந்து சொட்டுநீர் பாய்ச்சுகிறேன். யாரும் இரவில் விழித்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் மோட்டாரின் ஸ்டார்டர் கண்டிஷனாக இருக்க வேண்டும். கரண்ட் கட்டானாலோ, ஒரு பீஸ் போனாலோ ஸ்டார்டர் இறங்கி மோட்டார் தானாக ஆப் ஆகிவிட வேண்டும்.



தோட்டத்தில் உள்ள பண்ணையாளே இதை கவனித்துக்கொள்ளலாம். ஐந்து ஏக்கர் சொட்டுநீர் பாசன தென்னந்தோப்பை பராமரிக்க ஒரே ஒரு ஆள் போதும். மரங்களைச் சுற்றி களை எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். மரக்கன்றுகளுக்கு உரமிடுதல்: கீழ்கண்ட இயற்கை உரங்களை (பயோ பெர்டிலைசர்ஸ்) நன்கு கலந்து கன்றுகளுக்கு ஒரு கையளவு வேர் அருகில் வைத்து மண்ணைப் போட்டு மூடி தண்ணீர் விட வேண்டும்.


1. வெர்மி கம்போஸ்ட் - 10 கிலோ - ரூ.80/-, 2. வேம் -1 கிலோ ரூ.80/-, 3. ஆசோகிரீன்-1கிலோ - ரூ.50/-. இவைகளை மூன்று மாதங்களுக்கு, மாதம் ஒரு முறை வைத்தால் கன்றுகள் சீக்கிரம் வேறூன்றுவதுடன் நன்கு வளர்ந்துவிடும். அதன்பின் 6 மாதங்களுக்கு பயோ பெர்டிலைசர் 3 மாதங்களுக்கு ஒரு முறை இடவும். ஆறு மாதங்களுக்குப் பின் எந்த உரமும் அவசியமில்லை. இயற்கையாகவே மரங்கள் நன்கு வளர்ந்துவிடும். தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை. மழை நீரிலேயே மரங்கள் செழித்து வளரும்.


தேக்கு நாற்றுகள் தயாரித்தல்: என் தோட்டத்தில் உள்ள பொழிகாலில் 15 ஆண்டுகள் வளர்ந்த தேக்கு மரங்களை வெட்டி விற்ற பின் வேரிலிருந்து சிம்புகள் தழைத்து வருகின்றன. அந்த தேக்கு சிம்புகளை கணுவிற்கு ஒன்றாக வெட்டி கணுவில் உள்ள முளை மேல் நோக்கியவாறு ஊன்றியுள்ளேன். தற்போது அவை இலை விட்டு முளைத்துவருகின்றன. ஆக, தென்னந்தோப்பு வேலிகளில் தேக்கு, சவுக்கு ஆகியவைகளை நட்டுவளர்த்தால் நமக்கு வருமானம் கிடைப்பதுடன் எல்லோருக்கும் பயனளிக்குமாறு நல்ல காற்றும் மழையும் கிடைக்கும்.


-விங் கமாண்டர் எம்.எல்.ரங்கராஜன் (ஓய்வு)
1333, தடாகம் ரோடு,
ஆர்.எஸ்.புரம், கோயம்புத்தூர்-641 002.

நன்றி தினகரன்..

உயிரி பொருட்களிலிருந்து எரிசாராயம் உற்பத்தி:

நவீன தொழில்நுட்பம்

உயிரி பொருட்களிலிருந்து எரிசாராயம் உற்பத்தி:

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் எரிசாராயத்தில் பெருமளவு சர்க்கரை ஆலைகளிலிருந்து பெறப்படும் ஆலைக்கழிவு மூலம் தயாரிக்கப்படுகிறது.

எரிசாராயத்தை பொதுவாக 3 வகையான பயிர்களிலிருந்து உற்பத்தி செய்யலாம். ஒன்று இனிப்புசத்து கொண்ட கரும்பு, சர்க்கரைச்சோளம், வெப்ப மண்டல சர்க்கரை கிழங்கு போன்றவை.  

இப்பயிர்களின் சாற்றினை அரைப்பான்கள் கொண்டு பிழிந்து அவை இயந்திரம் மூலம் சர்க்கரைச்சாறு பிரித்தெடுக்கப்பட்டு "ஈஸ்ட்' என்ற நுண்ணுயிரியினைக் கலந்து நொதிப்பான்களில் நொதித்தல் முறையில் எரிசாராயம் உற்பத்தி செய்யப்படுகிறது. பெரும்பாலான சர்க்கரை ஆலைகள் சர்க்கரை உற்பத்தியின்போது பெறப்படும் மொலாசஸ் எனப்படும் சர்க்கரை பாவு கழிவு கொண்டு எரிசாராயத்தினை உற்பத்தி செய்கின்றன.

சுமார் 240 லிட்டர் எரிசாராயத்தை ஒரு டன் சர்க்கரைப்பாகு கழிவிலிருந்து பெறலாம் எனவும், 3010 லிட்டர் எரிசாராயத்தினை ஒரு எக்டர் இனிப்பு சோளத்திலிருந்து பெறலாம் எனவும், சுமார் 2500-3000 லிட்டர் எரிசாராயத்தை ஒரு எக்டர் வெப்ப மண்டல சர்க்கரைக் கிழங்கிலிருந்து பெறலாம் எனவும் பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் கணக்கிடப்பட்டுள்ளது. எரிசாராயம் உற்பத்தி செய்ய பல்வேறு மாவுப்பொருட்கள் பல்வேறு நாடுகளில் உபயோகப்படுத்தப்படுகிறது.

சோளம், உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு போன்ற பல்வேறு பயிர்களையும் எரிசாராயம் உற்பத்தி செய்ய உபயோகிக்கலாம். கூட்டு சர்க்கரைப் பொருள்களைக் கொண்டுள்ள மாவுப் பொருட்கள் முதலில் வெப்பம் கொண்டு தனி சர்க்க ரைப் பொருட்களாக மாற்றப்படுகின்றன.

பின்னர் நொதிகள் மூலம் மேலும் சர்க்கரையாக மாற்றப்படுகிறது. பின்னர் நொதித்தல் முறையில் ஈஸ்ட் கொண்டு எரிசாராயமாக மாற்றப்படுகிறது. 370 லி. எரிசாராயம் ஒரு டன் சோளத்திலிருந்தும், 90-100 லி. எரிசாராயம் 1 டன் உருளைக்கிழங்கிலிருந் தும் பெறப்படுகிறது.

மற்றுமொரு முறையில் பல்வேறு வகைப் பயிர் மற்றும் காடுகளின் கழிவுப் பொருட்களிலிருந்து உயிர் பொருட்களை நன்கு அரைத்து சிறு துகள்களாக மாற்றி அமில மற்றும் கார கரைசலில் கரைத்து நீர்மம் ஆக மாற்றப்பட்டு, நன்கு வினையேற்றம் செய்ய பல்வேறு நொதிகள் உபயோகிக்கப்பட்டு சர்க்கரைச்சத்து வெளியேற்றப்படுகிறது. இம்முறை மிகவும் கடினமானதாகவும் அதிக அளவில் சக்தியினை செலவு செய்வதாலும் இதனை உபயோகிப்பது மிகவும் கடினமானதாக உள்ளது. 

 எனினும் அதிக அளவில் எரிசாராயம் தேவைப்படுவதால் வரும் காலங்களில் இம்முறைகளில் எரிசாராயம் உற்பத்தி செய்வதற்கு பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. குறிப் பாக நெல் வைக்கோல், கோதுமை வைக்கோல், பண்ணை கழிவுகள், கரும்பு சக்கை போன்ற உயிர்ப்பொருட்களிலிருந்து எரிசாராயம் உற்பத்தி செய்ய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. எரிசாராயத்தை சிறந்த எரிபொருளாக இயந்திரங்கள் மற்றும் கார், டிராக்டர் போன்ற வாகனங்களுக்கும் உபயோகிக்க இயலும்.  

எரிசாராயம் 130 டிகிரி செல்சியஸ் எரிநிலையும், 423 டிகிரி செல்சியசில் தீப்பற்றும் வெப்ப நிலையையும் கொண்டுள்ளதால் இதனை சிறந்த எரிபொருளாக உபயோகிக்க இயலும். மேலும் பெட்ரோலிய பொருட்களுக்கு சிறந்த மாற்று எரிபொருளாக எரிசாராயம் திகழ்வதால் இதன் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. (தகவல்: நெ.உ.கோபால்,ப.வெங்கடா சலம், உயிர் சக்தி துறை வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. போன்: 0422-661 1276)

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

நன்றி தினகரன்...

கியூபாவில் அனைவருக்கும் சமமான ஊதியம் என்கிற கொள்கை ஒழிக்கப்படுகிறது !

கியூபாவின் அரசாங்கம் 1959 ஆம் ஆண்டு அங்கு புரட்சி ஏற்பட்டதிலிருந்து இருந்து வந்த கொள்கையான அனைவருக்கும் சமமான ஊதியம் என்கிற நடைமுறையை ஒழிப்பதாக அறிவித்துள்ளது. கூடுதலான உற்பத்தியை செய்பவர்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடையும் தொழிலாளிகளும் போனஸ் பெறுவர். தொழிலாளர்கள் வாங்கும் ஊதியத்துக்கு இருந்த உச்சவரம்பும் நீக்கப்படுகிறது.

மந்தமாகவுள்ள கியூபாவின் பொருளாதரத்தை தூக்கி நிறுத்தும் முகமாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. ஒரு விடயத்தை அதாவது சமத்துவ சமுதாயம் இனி சௌகரியப்படாத ஒன்றே என இந்த அறிவிப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

இதன் மூலம் கியூபாவுக்கு உள்ளேயும் வெளியுலகத்துக்கும் சொல்லப்படும் செய்தியானது யதார்த்தவாதியான ரவுல் காஸ்ட்ரோ இநாட்டை ஐம்பது ஆண்டுகாலம் ஆண்ட லட்சியவாதியான தனது மூத்த சகோதரரான ஃபிடல் காஸ்ட்ரோவில் எப்படி மாறுபட்டவர் எனகிற சமிஞ்கையை வெளியிடுவதுதான் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.


உறுதியான இந்த நடவடிக்கைகள் ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றை நோக்கிய பெரும் முன்னெடுப்புகளாக இல்லாவிட்டாலும் கியூபாவில் ஏற்படும் இவ்வாறான மாற்றங்கள் சிறியதாக இருந்தாலும் கவனிக்கப்படாமல் செல்லாது.

நன்றி அலைகள் (alaikal)டாட் காம்...

மலரும் பூமி

உங்களுடைய பதிவுகள் மலரும் பூமிக்கு வரவேற்க்கப் படுகிறது...
தோழர்க்ளே நீங்கள் படித்த இயற்கை வேளான்மை குறித்த செய்திகளை malarumboomi@in.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி பகிர்ந்து கொள்ளலாம்...


நன்றி மோகன்...